தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு. விஷ்ணு இ.ஆ.ப. அவர்களின் பொற்கரங்களால் பெற்றுக்கொண்டேன். இவ்விருதிற்கு பரிந்துரை செய்த பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கும், சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களுக்கும்,திரு நெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருது பெற ஊக்கசக்தியாக திகழ்ந்து வரும் எம் பள்ளி செயலர் அவர்களுக்கும், எம் பள்ளியின் புரவலர்களுக்கும், என் பெற்றோருக்கும், என் குடும்பத்தினருக்கும், என்னுடன் பணியாற்றும் எனது ஆசிரியர்களுக்கும், என் நண்பர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்,ஊர்பொதுமக்களுக்கும் எனதன்பு மாணவச்செல்வங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்