பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 15 ஆகஸ்ட், 2018

72-வது சுதந்திர தின விழா


நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில்  72-வது  சுதந்திர தின விழா  வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் வரவேற்புரையாற்றினார். பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் தலைமைதாங்கினார். நம் பள்ளியின் புரவலர் திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்கள் . பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப்பொருள் வழங்கி, இரண்டாவது ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 10000/- வழங்கினார்கள். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி, திருமதி. ஜேஸ் மாலா , திருமதி. கோமதி , செல்வி. துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.