பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 8 ஜூலை, 2018

அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிப்பு..

அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 1, 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, உடுமலையில் நேற்று நடந்தது.இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:தமிழகத்தில், மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டம், சர்வதேச அளவில், பல மாநிலங்களையும் கவனிக்கச்செய்துள்ளது.

அரசுப்பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டு தோறும், இவற்றை பராமரிப்பதற்கும் நிதி ஒதுக்கப்படும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளிலிருந்து, ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆகஸ்ட் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, செப்., வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடியில் சேர்க்கப்படும் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்கவும், அங்கன்வாடியில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகளில், செயல்பாடில்லாமல் உள்ள பெற்றோர் - ஆசிரியர் கழகங்களை, ஆய்வு செய்து மாற்ற வேண்டும்.சமூக சேவை மனப்பான்மையுள்ள, பள்ளியின் தரத்தை உயர்த்துவதில் ஆர்வமுள்ளவர்களை மட்டுமே, பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேல்நிலை வகுப்புகளுக்கு ஐ.சி.டி., எனப்படும் ஒருங்கிணைந்த கல்வி வழங்குவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆங்கிலத்திறனை வளர்ப்பதற்கு, தனி வகுப்பறை அமைக்கும் திட்டமும் உள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூலை, 12 முதல் சி.ஏ., பயிற்சிகள் துவங்குகின்றன. முதல் கட்டமாக, 2,000 மாணவர்களுக்கும், கல்வியாண்டுக்குள், 20 ஆயிரம் பேருக்கும் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகஸ்ட் முதல் அமல்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகஸ்ட்  முதல் அமல்: கல்வி அமைச்சர்பேச்சு அரசு ஊழியர்களின் பிள்ளைகளை,
அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று,, கட்டாயப்படுத்த முடியாது: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
ஆகஸ்ட் மாதம் முதல், அரசுப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு, அமலுக்கு வருகிறது என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், 80.24 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்கள், எந்தவொரு போட்டித்தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது
தனியார் பள்ளிகள், பள்ளி வேலை நாட்களில் 'நீட்' தேர்வு பயிற்சி மேற்கொள்ளகூடாது. விடுமுறை நாட்களில் மட்டுமே அளிக்க வேண்டும்
இதை மீறினால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது
ஈரோடு முதல் மேட்டுப்பாளையம் வரையிலும், அதேபோல் பவானி முதல், சத்தியமங்கலம் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். வரும் ஆக., முதல் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும், பயோ மெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில், வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது
கூடிய விரைவில், 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பணியில் அமர்த்தப்படும்
அரசு ஊழியர்களின் பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று, கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்

QR CODE-பயன்படுத்தும் முறைகள்


QR Code பயிற்சி வகுப்பிற்கு செல்லும்போது பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

#.  android phone ன் android version 5.1 ஐ விட advance ஆக உள்ளது எனவும்

Phone internal memory குறைந்தது 1GB space உள்ளது எனவும்

4G internet speed போதுமான அளவில் உள்ளது என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

# url link , bar code, Qr code ஆகிய மூன்று வழிகளில் நமக்கு தேவையான website க்கு செல்ல முடியும். இவற்றில் QR code முறை எளிது மேலும் அவ்வப்போது contentகளை update செய்ய முடியும் எனவே நமது பாடப்புத்தகங்களில்  QR code என்னும் Quick response codeகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

# QR codeகளை scan செய்ய நமது smart phoneல் inbuiltஆக இருக்கும் QR code scanner ஐ பயன்படுத்தி கொள்ளலாம்

அல்லது

Play store வழியாக Cam Scanner appஐ installசெய்து scan செய்யலாம்

அல்லது

Diksha app ஐ installசெய்து அதில் உள்ளscanner மூலமாகவும் scan செய்ய முடியும்.

எந்த scanner மூலம் scan செய்தாலும் contentகள் Diksha app மூலம் மட்டும் தான் play ஆகும் எனவே Diksha appஐ installசெய்வது சிறந்தது.

# QR codes 3 விதமாக உள்ளன.
1. முழு பாடப்புத்தகம் ebook

2. கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் AV Aids.

3. மதிப்பீட்டு பயிற்சி Evaluation/Assessment activities
 
இவற்றில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Diksha app மூலம் download ஆன files, ecar files ஆக save ஆகியிருக்கும். இவற்றை file manager மூலம் பார்க்க முடியாவிட்டால் ES File explorer app ஐ installசெய்து அதில் ecar என type செய்து search செய்தால் நம்மால் அவற்றை பார்க்க, play மற்றும் share செய்து கொள்ள முடியும்.

# smart phone இல்லாமல் laptop / desktop pc மூலம் QR code scan செய்ய

நமது computerல் முதலில் பாடப்புத்தகத்தை ( ebook ) pdf file ஆக download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 Computerல் Cam scanner software ஐ install செய்து நமது web camera மூலம் QR code ஐ scan செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Web camera இல்லாமல் scan செய்ய QR code scanner for Windows என்ற softwareஐ install செய்து அதன் மூலம்QR codeஐ selectசெய்து url link ஐ copyசெய்து அதை Google chromeல் paste செய்தும் contentஐ open செய்ய முடியும்.

Computer மூலம் இவ்வாறு QR code ஐ scan செய்வது கடினம் என நினைத்தால் Google Chrome ல் www.diksha.gov.in என type செய்து Diksha websiteல் நுழைந்து அதில் content explorerஐ     select செய்து அதில் syllabusக்கு State board Tamil nadu எனவும் medium, subject, class ஆகியவற்றை சரியாக select செய்து search செய்தால்
நமது பாடப்புத்தகத்தில் உள்ள content resources அனைத்தும் display ஆகும். அதில் இருந்து நமக்கு தேவையானதைத் தேர்ந்தெடுத்து view/play செய்து கொள்ள முடியும். இதற்கு smartphone தேவை இல்லை.

# நமது அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் Internet கண்டிப்பாகத் தேவை.

நீட் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்


நீட் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் நுழைவுத் தேர்வு இனிமேல் சிபிஎஸ்இ-க்கு பதிலாக, தேசிய தேர்வு முகமை மூலம், வருடத்திற்கு 2 கட்டங்களாக நடத்தப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.டெல்லியில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, தேசிய தகுதி தேர்வான நெட் மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் இனிமேல் தேசிய தேர்வு முகமை மூலமே நடத்தப்படும் என்றார்.

அனைத்து நுழைவுத் தேர்வுகளும் கணினி மூலமே நடத்தப்படும் எனத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்றார்.அனைத்து நுழைவுத் தேர்வுகளும் வருடத்திற்கு 2 மாதங்களில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று கூறிய அவர்,  நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மாணவர்கள் 2 கட்டத் தேர்வுகளிலும் பங்கேற்கலாம் என்றும், அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே மாணவர்களின் மதிப்பெண்களாக கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.நீட் முதல் கட்டத்தேர்வு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள் 4 நாட்கள் நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட நீட் தேர்வு மே மாதம் 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிக்குள் ஏதேனும் 4 நாட்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.தேர்வு நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், எந்த தேதியில் தேர்வு எழுதுவது என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.