பரிசளிப்பு விழா
வீரவநல்லூர் அல்பா முஹம்மது ஹுசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பில் தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் எடுத்த மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா நம் நடைபெற்றது. விழாவிற்கு வருகைதந்தவர்களை தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் வரவேற்றார். அல்பா முஹம்மது ஹுசைன் நினைவு கல்வி அறக்கட்டளையின்தலைவர் திரு. M.H.M. இப்ராஹிம் அவர்கள் தேர்வில்90 சதவிகிதத்திற்கு மேல் எடுத்த மாணாக்கர்கள் , விடுப்பு எடுக்காமல் வருகை மாணவர்கள் , வீட்டுப்பாடம் சரியாக எழுதிய மாணவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கினார்கள் . மாணவர்களிடம் பொதுவான கேள்விகள் கேட்டு சரியான பதில் கூறிய மாணவர்களுக்குப் வழங்கினார்கள். விழாவில் திருமதி. சல்மா இப்ராஹிம், திரு. முஹம்மது அலி ஜின்னா , திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி. முத்து செல்வி , திருமதி. அமுதவல்லி , திருமதி. ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, திருமதி. கோமதி, செல்வி. துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.