பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 15 செப்டம்பர், 2018

ஆங்கில உச்சரிப்பு மற்றும் வாசிப்புப் பயிற்சி வகுப்பு..

ஆங்கில உச்சரிப்பு மற்றும் வாசிப்புப் பயிற்சி வகுப்பு..
இன்று நம் மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு மற்றும் வாசிப்பு பயிற்சியினை புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியரும் அன்பு நண்பருமான திரு. தங்க ராஜ் அவர்கள் அளித்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பயிற்சியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். பயிற்சி அளித்த அன்பு நண்பருக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




வியாழன், 6 செப்டம்பர், 2018

தூய்மை நிகழ்வுகள்- ஓவியப்போட்டி

இன்று அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் மனித வள மேம்பாட்டுத்துறையின் தூய்மை நிகழ்வில் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஒவியப்போட்டியினை பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி. சு.கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் துவக்கி வைத்து வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்...