பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் சேமிப்புக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம்

 பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சேமிப்புக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் தலைமை வகித்தார்கள். முதல் கட்டமாக 17 மாணவர்களுக்கு இன்று சேமிப்பு கணக்கு துவங்கி சேமிப்புக்கணக்குப் புத்தகத்தினை பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தினைச் சேர்ந்த திரு. அய்யப்பன்(9994760712) அவர்கள் செய்திருந்தார்கள்.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக