பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 8 நவம்பர், 2022

LIC STUDENT OF THE YEAR 2022 AWARD

 LIC STUDENT OF THE YEAR 2022விருது வழங்கும் விழா இன்று நம்பள்ளியின் ஸ்ரீ சாய் கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.விழாவிற்கு சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை மேலாளர்  திரு. வேல்முருகன் அவர்கள் தலைமைவகித்தார்கள் .  சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக உதவி கிளை மேலாளர்  திரு.கருப்பசாமி அவர்கள் முன்னிலைவகித்தார்கள் . தலைமையாசிரியர் திரு. ராம்சந்தர் அவர்கள் வரவேற்றார்கள் .

சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை மேலாளர்  திரு. வேல்முருகன் அவர்கள் மாணவர்களுக்கு  LIC STUDENT OF THE YEAR 2022விருது வழங்கினார்கள்.சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நம் பள்ளியின் நூற்றாண்டு விழா நினைவுப்பரிசு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கபட்டது. பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்துச்செல்வி நன்றிகூறினார்கள். விழாவில் அனைத்து ஆசிரியர்களும் , தலைவர்மன்ற உறுப்பினர் திரு மாரியப்பன் மற்றும் அலுவலக ஊழியர் திரு. உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.