பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 31 ஜூலை, 2025

தினம் ஒரு திருக்குறள்

 

 


 தினம் ஒரு திருக்குறள் 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது 

தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு ஆக முடியாது

இன்றைய பொன்மொழி  

உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்.  

அறிவியல் துளிகள்  

மின்னல் என்பது மழை மேகங்களுக்குள் அல்லது மேகத்திற்கும் தரைக்கும் இடையே ஏற்படும் ஒரு மின்சார வெளியேற்றம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. மின்னலில் இருந்து சுமார் 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். இந்தளவு வெப்பம் கொண்ட மின்னல், மரத்தின் மீது பாயும் போது, மரத்தின் உட்பகுதியில் உள்ள நீர் முதலான பொருட்கள் ஆவியாகி விரிவடைந்து வெடிப்பது போன்ற வினை ஏற்படும். மின்னல் ஏற்படும் போது பாதுகாப்பாக இருப்பது அவசியம். 

பொது அறிவு 

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

பழமொழி 

அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.