பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 25 ஜனவரி, 2017

தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினம்  இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் திரு. ம. ராம் சந்தர்  தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் திருமதி.செண்பகம் முன்னிலை வகித்தார்.ஆசிரியை திருமதி. ஜேஸ் மாலா  வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தனர். மாணவர்களுக்கு  போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி. மணிமேகலை, திருமதி. இன்பரசி , சத்துணவு அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.