பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 4 நவம்பர், 2016

PARTNERSHIP PROGRAMME 3rd DAY

பள்ளிப்பரிமாற்றுத்  திட்டத்தின்  மூன்றாம் நாளில் நம் மாணவிகள் அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மேல் நிலைப்பள்ளிக்கு  சென்றனர் .  ஆங்கிலப்  பட்டதாரி ஆசிரியர் திரு. ஹரிகிருஷ்ணன்  அவர்கள்   ICT தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு    புரியும் வகையில் பாடம் நடத்தினார்கள். அன்னாருக்கு நம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் . ஓவிய ஆசிரியர் திரு. ரமேஷ் சந்திரா அவர்களி ன்  ஓவியத்திறமை ஆசிரியர்கள்  மற்றும் மாணவிகளை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஓவிய ஆசிரியை திருமதி. டெல்பின்  அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.களப்பயணமாக  வாகைக்குளம் பித்தளை உற்பத்தி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலாளர் திரு. தனபால் அவர்கள் விளக்கு உற்பத்தி செய்தலை  விளக்கினார்கள்.  திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. சங்கரி மற்றும் அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. ஹேம  லதா   ஆகியோருக்கு நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம்