பள்ளிப்பரிமாற்றுத் திட்டத்தின் மூன்றாம் நாளில் நம் மாணவிகள் அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்றனர் . ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் ICT தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு புரியும் வகையில் பாடம் நடத்தினார்கள். அன்னாருக்கு நம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் . ஓவிய ஆசிரியர் திரு. ரமேஷ் சந்திரா அவர்களி ன் ஓவியத்திறமை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஓவிய ஆசிரியை திருமதி. டெல்பின் அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.களப்பயணமாக வாகைக்குளம் பித்தளை உற்பத்தி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலாளர் திரு. தனபால் அவர்கள் விளக்கு உற்பத்தி செய்தலை விளக்கினார்கள். திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. சங்கரி மற்றும் அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. ஹேம லதா ஆகியோருக்கு நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம்