பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 5 ஜூன், 2025

உலக சுற்றுச் சூழல் தினம்

 திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுவாரியம்,  மாவட்ட சமூக நலத்துறை, அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி ,தாய்வீடு தொண்டு நிறுவனம்,  ஆல் தி சில்ரன் இணைந்து      உலக சுற்றுச் சூழல்  தினம் நிகழ்வு   இன்று அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . நிகழ்ச்சிக்கு  திருநெல்வேலி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  உதவி பொறியாளர் திருமதி. ஜெபா  அவர்கள் தலைமைதாங்கினார்கள். முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி முன்னிலை வகித்தார்கள் . மாவட்ட மகளிர் அதிகார மைய அலுவலர் திருமதி.பத்மா ,தாய்வீடு தொண்டு நிறுவனர் திரு. மகேஸ்வரன் ,ஆல் தி சில்ரன் நிறுவனத்தின் சார்பில் திரு . மதன்ராஜ்  ஆகியோர்  சிறப்பு கருத்தாளர்களாக கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் திரு. ராம்சந்தர்  வரவேற்புரை ஆற்றினார்.  உலக சுற்றுச் சூழல்  தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பெற்றது. மேலும் மாணவர்களுக்கு  மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்  மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் பிரித்து பார்க்கும் விளையாட்டு போட்டி நடைபெற்றது.  திருநெல்வேலி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  உதவி பொறியாளர் திருமதி. ஜெபா  அவர்கள் சுற்றுசூழல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். நெகிழி விழிப்புணர்வு குறித்து மாவட்ட மகளிர் அதிகார மைய அலுவலர் திருமதி.பத்மா அவர்கள் உரையாற்றினார்கள். தாமிரபரணி நதி தூய்மை குறித்து  தாய்வீடு தொண்டு நிறுவனர் திரு. மகேஸ்வரன் அவர்கள் உரையாற்றினார்கள். நெகிழி மற்றும் சுற்றப்புற  தூய்மை குறித்து ஆல் தி சில்ரன் நிறுவனத்தின் சார்பில் திரு . மதன்ராஜ்  அவர்கள் உரையாற்றினார்கள் . மாணவர்களுக்கு தாமிபரணி தூய்மை குறித்த காணொளி காண்பிக்கப்பட்டது .ஓவியப்போட்டி மற்றும் சுற்றுசூழல்  விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினார்கள் . திருநெல்வேலி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  உதவி பொறியாளர் திருமதி. ஜெபா  அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பைகள்  வழங்கினார்கள் .பட்டதாரி ஆசிரியர் திருமதி.முத்துசெல்வி  நன்றிகூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி திருமதி.ஜேஸ்மாலா  திருமதி.கோமதி திருமதி ஜெயலட்சுமி திருமதி. சண்முகத்தில்லை ,திருமதி.அன்னலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்