பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிஅழைப்பிதழ்..

அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவ மாணவியர் நடத்தும்
நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நாளை 05.08.2019 அன்று காலை 10 மணிக்கு அரிகேசவ நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். நிகழ்வில் கலந்து கொள்ள வருகைதரும் பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர்,பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள்,பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம்..
இவண்,
செயலர்,தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர், இந்து நடு நிலைப்பள்ளி, அரிகேசவ நல்லூர்