பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தில் இன்று அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை திட்ட பொறுப்பாசிரியர்கள் திருமதி. சங்கரி, திரு.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அழைத்து வந்தனர். ஆங்கிலப் பாடத்தினை திருமதி. மணிமேகலை அவர்கள் காணொலிக் காட்சியுடன் மிகச் சிறப்பாக நடத்தினார்கள். மாணவிகளுக்கு வங்கிச் செலுத்து சீட்டு பூர்த்தி செய்ய பயிற்சி அளிக்கப் பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. களப்பயணமாக வீரவநல்லூர் அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கத் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு பத்தி , சோப்பு, பட்டு சேலை,சட்டைகள், பஞ்சு மெத்தைகள் மற்றும் கட்டில்கள் செய்வதை நேரடியாகப்; பார்த்தனர். பின் அனைத்து மாணவிகளுக்கும் தேநீர் மற்றும் பிஸ்கட் அளித்தனர். அனுமதி வழங்கிய அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கசெயலர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், திரு. காமாட்சி சுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தினை சிறப்பாக நடத்த ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திர சேகர் அவர்களுக்கும், அனைவருக்கும் கல்வித்திட்ட மேற்பார்வையாளர் திருமதி.
. சோபியா மெர்சி ஆக்னஸ் அவர்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். திட்டத்தை எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. முத்துச்செல்வி, திருமதி. அமுதவல்லி, திருமதி ஜேஷ் மாலா ,திருமதி மணிமேகலை,செல்வி இன்பரசி ஆகியோர் சிறப்பாக நடத்தினார்கள்.
ம.ராம் சந்தர்
தலைமையாசிரியர்