பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 29 நவம்பர், 2016

2016-  எமக்குக்  கிடைத்த  வரங்கள் - அல்ஃபா முஹம்மது ஹுசைன் தொண்டு நிறுவனம் -திரு. இப்ராகிம் அவர்கள்


          

                      வீரவ நல்லுர் அல்ஃபா டெக்ஸ் மற்றும் அல்ஃபா அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழாவில் , தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற எங்களது அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் மதிப்பிற்குரிய வி.விஷ்ணு இ.ஆ.ப.,அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.  முதன் முதலாக I.A.S. அதிகாரியின்  பொற்கரங்களால் எம் மாணவர்களுக்கு  பரிசுகள் பெற வைத்த  ஐயா திரு. இப்ராஹிம் அவர்களுக்கு இச் சமயத்தில் மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம். 
          மேலும் நம் மாணவர்களுக்கு  கல்வி பயில புதிய கணிப்பொறி ஒன்றினை அளித்த்துள்ளார்கள் . மாணவரிகளுக்கு இணையம் வாயிலாக பாடம் நடத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 
ஐயா திரு. இப்ராஹிம் அவர்கள் இறைவன் எமக்கு அளித்த வரமாவர். 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக