திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை(Pandit
Madan Mohan Malaviya National Mission on Teachers and Teaching(an MHRD
Project, Govt.of India)) நடத்தும் A Two Day Symposium on SUCCESS STORIES
OF INNOVATIVE TEACHING நிகழ்வில் Secrets behind a Decade of Success
என்னும் தலைப்பில் உரையாற்ற வாய்ப்பளித்த திருநெல்வேலி மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும் , கல்வியியல் துறை தலைவர் முனைவர்.வில்லியம் தர்மராஜ் அய்யா அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2010 முதல் 2019 வரை பள்ளியின் வளர்ச்சியினை இந்த நிகழ்வு வெளிக்கொண்டு வந்துள்ளது. பள்ளியின் உட்கட்டமைப்பு முதல் மாணவர் முன்னேற்ற செயல்பாடுகள் குறித்து உரையாற்ற பெரும் வாய்ப்பாக அமைந்தது. நம் பள்ளியின் செயல்பாடுகளும் வெளிக்கொண்டு வர ஒரு மிகப்பெரிய மேடை கிடைத்தது. தோராயமாக ரூபாய் முப்பத்து ஐந்து லட்சம் மதிப்பிலான உதவிகள் நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்,பெரியோர்கள் மற்றும் முகநூல் நண்பர்களுக்கு நன்றி சொல்ல இந்த மேடை உதவியாக அமைந்தது.
எம் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரவும் இந்த நிகழ்வு பேருதவி புரிந்தது.
ஒரு தலைமை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனையும், தனது துறையை எந்த அளவு நேசித்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரிய ஆளுமையான கல்வியியல் துறை தலைவர் முனைவர்.வில்லியம் தர்மராஜ் அய்யா அவர்களின் அறிமுகம் இந்த நிகழ்வில் எங்களுக்கு கிடைத்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி அளித்த எம்பள்ளி செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்களுக்கும் பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சு. கல்யாணி அவர்களுக்கும் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்