பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .




2019 எங்களுக்கு தந்தது ....
கூடுதல் வகுப்பறை கட்டிடம்
3 ஆண்டிராய்டு டீ.வி.
1 ப்ரொஜெக்டர்
நூலக அறை
முழுமையான விழா மேடை
எம் ஆசிரியருக்கு புதுமையாசிரியர் விருது..
கூடுதலாக 4 சி சி டீ வி  கேமரா

2020 ல் நாங்கள் வேண்டுவது
மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது ...
5000 நூல்கள் ..
10 கணிப்பொறிகளுடன் ஒரு கணிப்பொறி வகுப்பறை ...

2019 ற்கு நன்றி சொல்லி 2020 னை  அன்புடன் வரவேற்கிறோம்....

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

சனி, 30 நவம்பர், 2019

SUCCESS STORIES OF INNOVATIVE TEACHING -Secrets behind a Decade of Success

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை(Pandit Madan Mohan Malaviya National Mission on Teachers and Teaching(an  MHRD Project, Govt.of India)) நடத்தும் A Two Day Symposium on SUCCESS STORIES OF INNOVATIVE TEACHING நிகழ்வில் Secrets behind a Decade of Success என்னும் தலைப்பில் உரையாற்ற வாய்ப்பளித்த திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும் , கல்வியியல் துறை தலைவர் முனைவர்.வில்லியம் தர்மராஜ் அய்யா அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
                         2010 முதல் 2019 வரை பள்ளியின் வளர்ச்சியினை இந்த நிகழ்வு வெளிக்கொண்டு வந்துள்ளது. பள்ளியின் உட்கட்டமைப்பு முதல் மாணவர் முன்னேற்ற செயல்பாடுகள் குறித்து உரையாற்ற பெரும் வாய்ப்பாக அமைந்தது. நம் பள்ளியின் செயல்பாடுகளும் வெளிக்கொண்டு வர ஒரு மிகப்பெரிய மேடை கிடைத்தது. தோராயமாக ரூபாய்  முப்பத்து ஐந்து லட்சம்  மதிப்பிலான உதவிகள் நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்,பெரியோர்கள் மற்றும் முகநூல் நண்பர்களுக்கு நன்றி சொல்ல இந்த மேடை உதவியாக அமைந்தது.
               எம் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரவும் இந்த நிகழ்வு பேருதவி புரிந்தது.
                ஒரு தலைமை  எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனையும், தனது துறையை எந்த அளவு நேசித்து வளர்ச்சிப்பாதையில்  கொண்டு செல்லும் மிகப்பெரிய ஆளுமையான கல்வியியல் துறை தலைவர் முனைவர்.வில்லியம் தர்மராஜ் அய்யா அவர்களின் அறிமுகம் இந்த நிகழ்வில் எங்களுக்கு கிடைத்தது.
       இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி அளித்த எம்பள்ளி செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்களுக்கும் பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சு. கல்யாணி அவர்களுக்கும் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்

















ஞாயிறு, 24 நவம்பர், 2019

A Two Day Symposium on SUCCESS STORIES OF INNOVATIVE TEACHING- M S UNIVERSITY

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை(Pandit Madan Mohan Malaviya National Mission on Teachers and Teaching(an  MHRD Project, Govt.of India)) நடத்தும் A Two Day Symposium on SUCCESS STORIES OF INNOVATIVE TEACHING நிகழ்வில் Secrets behind a Decade of Success என்னும் தலைப்பில் உரையாற்ற வாய்ப்பளித்த திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும் , கல்வியியல் துறைக்கும் எம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்
.

 

திங்கள், 18 நவம்பர், 2019

குழந்தைகள் தின வாழ்த்துஅட்டை வழங்கும் விழா

அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அளவற்ற அக்கறையும் ஆர்வமும் கொண்ட அன்பு சகோதரர் திரு .ரவிசொக்கலிங்கம் அவர்கள் நம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய வாழ்த்து அட்டைகளை குழந்தைகள் தினத்தன்று






நம்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தனது  புகைப்படத்தினைக்கொண்ட வாழ்த்து அட்டைகளைகண்ட மாணவர்களின் மகிழ்ச்சியான  கண்களைக்  காண வாய்ப்பளித்த வாய்ப்பளித்த அன்பு சகோதரர் திரு .ரவிசொக்கலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி......

திங்கள், 28 அக்டோபர், 2019

"ஹரிநாராயணன் " திறப்பு விழா

நம் பள்ளியின் புதிய கட்டிடமான "ஹரிநாராயணன் " திறப்பு விழா ,95 வது ஆண்டு விழா மற்றும் நூலக அறை  திறப்புவிழா  ஆகியன மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் தலைமை வகித்தார்கள். நம் பள்ளியின்  செயலர் திரு. டீ.வி. சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தரைத்தளத்தினை  திரு.Dr.ராமசுப்பிரமணியன் அவர்களும் அன்னாரின் சகோதரர் திரு. Dr.அமீர்ஜான் அவர்களும் இணைந்து திறந்து வைத்தார்கள். முதல் தளத்தினை அல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு.M.H.M. இப்ராஹிம் அவர்கள் திறந்து வைத்தார்கள் . நூலக அறையினை பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் திறந்து வைத்தார்கள்.  வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திருஎ .சாம்சன் அவர்கள் சிறப்புரை ஆற்றி போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திரு. S.பிரான்சிஸ் முத்துராஜ் M.A.,M.Ed.,M.Phil.,அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர் .




















திங்கள், 7 அக்டோபர், 2019

ஹரிநாராயணன் கட்டிடத்திறப்பு விழா அழைப்பிதழ்

ஹரிநாராயணன் கட்டிடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்