பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 10 நவம்பர், 2016

PARTNERSHIP PROGRAMME 4th day

பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தில் இன்று அம்பாசமுத்திரம் A .V .R .M .V . அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை  திட்ட பொறுப்பாசிரியர்கள்  திருமதி. சங்கரி, திரு.ஹரிகிருஷ்ணன்  ஆகியோர் அழைத்து  வந்தனர். ஆங்கிலப் பாடத்தினை திருமதி. மணிமேகலை  அவர்கள்   காணொலிக் காட்சியுடன் மிகச் சிறப்பாக நடத்தினார்கள். மாணவிகளுக்கு  வங்கிச் செலுத்து சீட்டு பூர்த்தி செய்ய பயிற்சி அளிக்கப் பட்டது.  மதிய உணவு இடைவேளைக்குப் பின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. களப்பயணமாக  வீரவநல்லூர் அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கத்  தலைமை அலுவலகத்திற்கு  அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு பத்தி , சோப்பு, பட்டு சேலை,சட்டைகள், பஞ்சு மெத்தைகள் மற்றும் கட்டில்கள் செய்வதை நேரடியாகப்; பார்த்தனர். பின் அனைத்து மாணவிகளுக்கும் தேநீர் மற்றும் பிஸ்கட்  அளித்தனர். அனுமதி வழங்கிய அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கசெயலர் திரு. ராமகிருஷ்ணன்  அவர்களுக்கும், திரு. காமாட்சி சுந்தரம் அவர்களுக்கும்  மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தினை  சிறப்பாக  நடத்த  ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திர சேகர்  அவர்களுக்கும், அனைவருக்கும் கல்வித்திட்ட   மேற்பார்வையாளர் திருமதி.. சோபியா மெர்சி ஆக்னஸ் அவர்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். திட்டத்தை  எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. முத்துச்செல்வி, திருமதி. அமுதவல்லி, திருமதி ஜேஷ் மாலா ,திருமதி மணிமேகலை,செல்வி இன்பரசி ஆகியோர்  சிறப்பாக நடத்தினார்கள்.

ம.ராம் சந்தர்











தலைமையாசிரியர்