பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 15 பிப்ரவரி, 2017

கனவு...நனவாகிறது.....

கனவு...நனவாகிறது.....

எம் பள்ளி செயலர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கனவான பெரிய விளையாட்டு மைதானம், நிரந்தர விழா மேடை  அமைக்கும் பணி  இன்னும் இரு நாட்களில்  நிறைவடைகிறது.

இப்பணி தொடங்கிய நாளிலிருந்து மிகவும் ஆர்வமுடன்  ஊக்கமளித்து வரும் எம் பள்ளி செயலர் திரு.டி.வி . சுப்பிரமணியன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினரும் எம் பள்ளியின் மூத்த ஆசிரியருமான திரு. இரா. மணி அவர்கள் , மற்றும் வீரவநல்லூர் அல் பா  முஹம்மது ஹுசைன் அறக்கட்டளையின் தலைவர் திரு. இப்ராஹிம் அவர்களுக்கும்  தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல் பா  முஹம்மது ஹுசைன் அறக்கட்டளையின் தலைவர் திரு. இப்ராஹிம்  அவர்கள் எம் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிகளும், பரிசுகளும் வழங்கிக்கொண்டே வருகிறார்கள். மைதான வேலையைக் கூறிய உடன் இன்முகத்தோடு உடனடியாகப் பொருளுதவியும் அளித்துள்ளார்கள். அன்னாருக்கு செயலர் ,தலைமையாசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



மேலும் மைதானத்தில் மரக்கன்றுகள் நட  திட்டமிட்டுள்ளோம்.

பெரியோர்களின் பொருளுதவியுடன்  மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய அனைத்து  விளையாட்டு உபகரணங்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம். உதவும் கரங்களுக்காகக் காத்திருக்கிறோம்.

வரும் மார்ச் மாதம் விளையாட்டு மைதானம் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டுவிழா நடத்த உள்ளோம். எம் மாணவர்களின் தனித்திறனைக் காண வருகை தர வேண்டுகிறோம்.
எம் கனவு...நனவாகிறது.....