தொடக்கக் கல்வி துறையின் அறிவியல் கொண்டாட்டம் முகாம் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது . நிகழ்ச்சியினை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. பி. மேரி சொருப ராணி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் திரு. இசக்கியப்பன் திருமதி. வல்சாலா மற்றும் திருமதி. புனிதவல்லி ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைகளை செய்து காட்டினர் . மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். மாணவர்கள் கேட்ட கேள்விகளில் சில அணு உலயினால் என்ன நன்மை? அதற்க்கு ஏன் இவ்வளவு நாள் கழித்து எதிர்ப்பு? பயம் என்றால் என்ன? ரத்தத்தைஎப்படி வகையாக பிரிக்கிறார்கள்? முடிக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் ? இது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்குரிய பதில்களை தெரிந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியர் திரு. இரா. மணி, ஆசிரியைகள் ராமலக்ஷ்மி , மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெள்ளி, 21 அக்டோபர், 2011
வெள்ளி, 7 அக்டோபர், 2011
புதன், 5 அக்டோபர், 2011
சரஸ்வதி பூஜை
செவ்வாய், 4 அக்டோபர், 2011
பரிசு வழங்குதல்
இன்று காலை வீரவநல்லூர் ஹைட்ஸ் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்திய ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. திரு.காமராஜ் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். தலைமை ஆசிரியர் ம. ராம்சந்தர் நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)