பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

VIDEO -நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி


நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி

அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவ மாணவியர் நடத்திய
நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்  இன்று  (05.08.2019 ) காலை 10 மணிக்கு அரிகேசவ நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து





















நடைபெற்றது.தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர்  வரவேற்புரையாற்றினார் . விழாவிற்கு கிரியம்மாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் திரு. சுடலை அவர்கள் தலைமைதாங்கினார்கள். அரிகேசவநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் திருமதி . பத்திரகாளி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியில்  மாணவர்கள் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி  யோகா பயிற்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தினார்கள்.  மாணவர்கள்தாங்கள் வரைந்த நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு தொடர்பான ஓவியங்களை பொதுமக்களிடம் காண்பித்து விளக்கமளித்தார்கள் . பின்பு  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருமதி. முத்து செல்வி அவர்கள் நன்றிகூறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி.அமுதவல்லி ,திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. அபிராமி, திருமதி. கோமதி, செல்வி.துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.