தமிழக காவல்துறையில் பல விருதுகள் பெற்று மிகச்சிறப்பாகப் பணியாற்றி வரும் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. சாம்சன் அவர்கள் இன்று நம் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். கையெழுத்துப்பயிற்சி , வகுப்பறை மேலாண்மை , பள்ளி வளாக சுத்தம், மாணவர்களிடம் பகிர்ந்தளிக்கும் பண்பினை வளர்த்தல்,தன்சுத்தம், சமூகப்பண்பினை வளர்த்தல்,ஸ்மார்ட் வகுப்பறை , களப்பயணம் .... இது குறித்து அவர் பேசியது ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவரது ஒவ்வொரு வார்த்தையும் அவரது அனுபவத்தினையும், பக்குவத்தினையும், உற்றுநோக்கலையும் எங்களுக்கு உணர்த்தியது. மாணவர்களுடன் சத்துணவு உண்டது எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது.சாம்சன் அய்யாவைப்பற்றி சமூக வலைத்தளங்களில் படித்திருக்கிறோம். இன்று நேரில் பார்க்க வாய்ப்பளித்த அய்யாவிற்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்த அய்யாவிற்கு எங்களின் சல்யூட்...
நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்த அய்யாவிற்கு எங்களின் சல்யூட்...