பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 4 ஜனவரி, 2022

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா-பொருளுதவி

 2022-23ம் கல்வியாண்டில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவினைக் காண உள்ளது.  நூற்றாண்டு விழா நினைவாக ரூபாய் பதினான்கு லட்சம்  மதிப்பில் புதிய கட்டிடம் ஒன்றினைக்  கட்ட தீர்மானித்து, பொருளுதவி கேட்ட உடன்  ரூபாய் ஐந்து லட்சம் அளித்த  நம் பள்ளியின் புரவலர் டாக்டர்.ராமசுப்பிரமணியன் -திருமதி.நந்தினி ராம சுப்பிரமணியன் அவர்களுக்கும் , ரூபாய் 50000/- அளித்த நம் பள்ளியின் முன்னாள் மாணவரும் பி எஸ் என் எல் முன்னாள் பொது மேலாளருமான திரு. சூரிய நாராயணன் அவர்களுக்கும் , ரூபாய் 10000/- அளித்த ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர்.சங்கரநாராயணன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் ...