பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 29 மார்ச், 2024

101 வது ஆண்டு விழா

 அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியின் 101 வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு அம்பாசமுத்திரம் வனச்சரகர் திரு குணசீலன் அவர்கள் தலைமை வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். ஆசிரியை திருமதி ஜேஸ் மாலாஅவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். தலைமை ஆசிரியர்  திரு . ராம்சந்தர் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள். பள்ளி செயலர் திரு டி வி சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் டேக்வாண்டோ பயிற்சியாளர் திரு பாரதிராஜா அவர்களின் பயிற்சியில் டேக்வாண்டோ மற்றும் சிலம்பம் ஆகியவற்றை பயிற்சி செய்து காண்பித்தார்கள். ஆசிரியை திருமதி. முருகத்தாய் அவர்கள் நன்றியை கூறினார். ஆசிரியை திருமதி முத்துச்செல்வி அவர்கள் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி அமுதவல்லி திருமதி கோமதி திருமதி அன்னலட்சுமி ஆகியோர் செய்திருந்தார்கள். விழாவில் வனவர் திரு கண்ணன், திரு அய்யப்பன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்







































 

வியாழன், 22 பிப்ரவரி, 2024

பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் சேமிப்புக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம்

 பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சேமிப்புக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் தலைமை வகித்தார்கள். முதல் கட்டமாக 17 மாணவர்களுக்கு இன்று சேமிப்பு கணக்கு துவங்கி சேமிப்புக்கணக்குப் புத்தகத்தினை பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தினைச் சேர்ந்த திரு. அய்யப்பன்(9994760712) அவர்கள் செய்திருந்தார்கள்.




 

வியாழன், 15 பிப்ரவரி, 2024

புத்தாண்டுப்பரிசாக எம் பள்ளி நூலகத்திற்கு 80 தமிழ் நூல்கள்மற்றும் 80 ஆங்கில நூல்கள்

 2024 புத்தாண்டுப்பரிசாக எம் பள்ளி நூலகத்திற்கு 80 தமிழ் நூல்கள் மற்றும் 80 ஆங்கில நூல்கள் வழங்கிய மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


திருநெல்வேலி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசு

 

திருநெல்வேலி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசுகள் பெற்ற நம் பள்ளி மாணவர்கள் பாலமுருகன்,பகவதிபிரியா,
காவியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....
வெற்றிகள் தொடரட்டும்...