பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பள்ளிப் பரிமாற்றுத்திட்டத்தின் நிறைவு விழா

பள்ளிப் பரிமாற்றுத்திட்டத்தின் நிறைவு விழா  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் இன்று  நடைபெற்றது. விழாவிற்கு  பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் தலைமைவகித்தார் .பாப்பாக்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர்  திருமதி.. சோபியா மெர்சி ஆக்னஸ்  அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் திரு. ம . ராம் சந்தர் வரவேற்புரை ஆற்றினார் . அம்பாசமுத்திரம் AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் திருமதி. சங்கரி , திருமதி. சங்கீதா, அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் திருமதி. முத்துச்செல்வி, திருமதி. ஜேஸ் மாலா  மற்றும் இப்பள்ளி மாணவிகள் ஆகியோர்  பள்ளிப்பரிமாற்றுத்திட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி சார்பாக அம்பாசமுத்திரம் AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு  நினைவுப்பரிசினை பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் அவர்கள் வழங்கினார்கள் . மேலும் இரு பள்ளி மாணவிகள் அனைவருக்கும்  ஆங்கில அகராதி பரிசு வழங்கப்பட்டது.  பின் கண்காட்சியினை பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் அவர்கள் திறந்து வைத்தார்கள் . பாப்பாக்குடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் அவர்கள் , மேற்பார்வையாளர் , திரு























மதி. அமுதவல்லி மற்றும் திருமதி சங்கீதா  ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள். பிற பள்ளி மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியினைப் பார்வையிட்டார்கள் . எம் பள்ளி செயலர் திரு. டி .வி. சுப்பிரமணியன் அவர்கள்  கலை நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்து  சிறப்புரை ஆற்றினார்.  மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு செயலர் அவர்கள் பரிசுகள் வழங்கி  பாராட்டினார்கள். பள்ளிப்பரிமாற்றுத் திட்டத்தில் எம் பள்ளியினை இணைத்ததற்கு கல்வித்துறை அதிகாரிகளுக்கு எம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் இந்து நடுநிலைப்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. முத்து செல்வி , திருமதி. ஜேஷ் மாலா மற்றும் நம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.மணிமேகலை, செல்வி.இன்பரசி ஆகியோரின் ஒத்துழைப்பினால்  இன்றைய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.