தினம் ஒரு திருக்குறள்
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.
இன்றைய பொன்மொழி
துணிவு....இதில்தான் உங்களின் மேதைத்தனம் ,அற்புதம் ,ஆற்றல் என அனைத்தும் புதைந்து கிடக்கின்றன ..... கதே
அறிவியல் துளிகள்
பூமிக்கு ஆறு நிலவுகள்
விண்கல், சிறுகோள் உள்ளிட்டவை பூமிக்கு அருகே வரும் போது அதை தற்காலிக சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம். இந்நிலையில் எந்த நேரத்திலும் பூமி ஆறு 'சிறிய நிலவுகளை' தற்காலிகமாக வைத்திருக்கலாம். இது அளவில் (6.5 அடி நீளம்) சிறியதாக இருப்பதால் பார்க்க முடியாது என ஹவாய் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. '2024 பி.டி.5' விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, 2024 செப்., 29 - நவ., 25 வரை 34 லட்சம் கி.மீ., துாரத்தில், மணிக்கு 3540 கி.மீ, வேகத்தில் தற்காலிக நிலவாக சுற்றி வந்து, பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி அதன் சுற்றுப்பாதையில் சென்றது.
பொது அறிவு
வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்
விடை: அகிலன்
பழமொழி
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது