பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 24 நவம்பர், 2016

PARTNERSHIP PROGRAMME 6 TH DAY(MATHS)

பள்ளிப் பரிமாற்றுத்திட்டத்தின  ஆறாம் நாளான இன்று கணித வகுப்பு  நடைபெற்றது.வருகை தந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியர் திரு.ம. ராம்சந்தர் வரவேற்றார். முதல் நிகழ்வாக யோகாப் பயிற்சி அளிக்கப்பட்டது. பின் கணித வகுப்பினை  திருமதி. முத்துச்செல்வி அவர்கள் மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தினார்கள். மாணவிகளுக்கு நேப்பியர் முறை, வரைபடம் வரைதல் கற்றுக்கொடுக்கட்டப்பட்டது. மதியம் கலை நிகழ்ச்சிகள் , கணித புதிர் விளையாட்டுகள், வினாடி  வினா நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப்  வழங்கப்பட்டது . பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு . சந்திர சேகர் அவர்கள் பார்வையிட்டு இரு பள்ளியைச் சேர்ந்த மாணாக்கர்களுடன்  கலந்துரையாடினார். A.V.R.M.V. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள்  திருமதி. கல்பனா , திருமதி. கிரேஸ் ஹெலன் ரூபி , இந்து நடுநிலைப்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. முத்து செல்வி , திருமதி. ஜேஷ் மாலா மற்றும் நம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.மணிமேகலை, செல்வி.இன்பரசி ஆகியோரின் ஒத்துழைப்பினால்  இன்றைய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.











www.hindumiddleschool.blogspot.com