பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 9 ஆகஸ்ட், 2017

பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம்

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் இன்று (09.08.2017) காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் திரளாகக்  கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் திரு.ராம் சந்தர்  தலைமைதாங்கினார். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி வரவேற்புரை  ஆற்றினார். கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி குறித்தும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  மேலும் சுகாதாரம் குறித்தும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா ஊராக அரிகேசவநல்லூர் இருக்க வேண்டும் என்ற தீரமானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பெற்றோரிடம் பள்ளியின் சிறப்புகளான சுகாதாரமான பள்ளிவளாகம், இருக்கை வசதிகள், அழகான தெளிவான தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப்பயிற்சி , ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான வகுப்பறை  , மாணவர் மன்ற செயல்பாடுகள் , பள்ளி வளாகம்  முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி , கணினி வழி கல்வி , சுகாதாரமான குடிநீர் வசதி  முதலான சிறப்புகள் குறித்து  பெற்றோர்களிடம்  எடுத்துக் கூறப்பட்டது. ஆசிரியர் திருமதி.ஜேஸ் மாலா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி. திருமதி. மணிமேகலை , செல்வி.                    இ ன்பரசி  ஆகியோர் செய்திருந்தனர்.