பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 11 டிசம்பர், 2018

கலந்துரையாடல் - மாற்றத்தின் ஆரம்பம்

 நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக SKYPE-நேரலை வகுப்பில் இன்று இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி , புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பாரதியின் பிறந்த நாளான இன்று பாரதியின் பாடலோடு ஆரம்பமானது. வகுப்பு நிகழ்வுகள் அனைத்துமே மாணவர்களின் பங்களிப்பாக மட்டும்  இருந்தது.  மாண்புமிகு. அப் துல்  கலாம் குறித்த உரை, ஆங்கில உரையாடல், ஆங்கில உரை, மாநிலங்களின் பெயர்கள்(தலைநகரத்தோடு), மாவட்டங்களின் பெயர்கள், எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு ,பதினென்கீழ்கணக்கு நூல் பெயர்கள் கூறுதல்  ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  ஆசிரியர்கள்  சண்முக சுந்தரம் , தங்கராஜ், ராம் சந்தர்   மற்றும் மூன்று பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த கலந்துரையாடல்  மாற்றத்தின் ஆரம்பம் என்பது உறுதி .






திங்கள், 10 டிசம்பர், 2018

அரிகேசவநல்லூர் திரு.T . அருணாச்சலம் பிள்ளை அவர்களின் 100 வது பிறந்தநாள்

அரிகேசவநல்லூர் திரு.T . அருணாச்சலம் பிள்ளை அவர்களின் 100 வது  பிறந்த நாளை முன்னிட்டு  அன்னாரின் புதல்வர் திரு.அ . பாலசுப்பிரமணியன் (Chief Manager,State Bank of India(Rtd))  அவர்கள் தங்கள்  குடும்பத்தினருடன் நம் பள்ளிக்கு வருகை புரிந்து குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கினார்கள் . அவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறோம்.







புதன், 14 நவம்பர், 2018

புத்தக வாசித்தலின் முக்கியத்துவம்

வாசித்தல் மனிதனை முழுமையாக்கும் . இதனை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்கு  புத்தக வாசித்தலின் முக்கியத்துவம்  குறித்த ஒளிப்படம் மாணவர்களுக்கு இன்று காட்டப்பட்டது.




புதன், 31 அக்டோபர், 2018

SKYPE-ONLINE CLASS

SKPYE - ONLINE  வீடியோ மூலம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களும், அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களும் இணைந்து கலந்துரையாடினார், இரு பள்ளி மாணவர்களும் தங்களுக்குத்தெரிந்த பாடல்கள், ஆங்கிலச்சொற்கள், திருக்குறள்  ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டனர். புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  ஆசிரியர் திரு. தங்கராஜ் அவர்கள் இரு பள்ளி மாணவர்களுக்கும்  ஆங்கில உச்சரிப்புப் பயிற்சியினை அளித்தார். இந்த நிகழ்வில் இரு பள்ளி மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


சனி, 15 செப்டம்பர், 2018

ஆங்கில உச்சரிப்பு மற்றும் வாசிப்புப் பயிற்சி வகுப்பு..

ஆங்கில உச்சரிப்பு மற்றும் வாசிப்புப் பயிற்சி வகுப்பு..
இன்று நம் மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு மற்றும் வாசிப்பு பயிற்சியினை புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியரும் அன்பு நண்பருமான திரு. தங்க ராஜ் அவர்கள் அளித்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பயிற்சியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். பயிற்சி அளித்த அன்பு நண்பருக்கு பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




வியாழன், 6 செப்டம்பர், 2018

தூய்மை நிகழ்வுகள்- ஓவியப்போட்டி

இன்று அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் மனித வள மேம்பாட்டுத்துறையின் தூய்மை நிகழ்வில் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஒவியப்போட்டியினை பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி. சு.கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் துவக்கி வைத்து வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்...







வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மாணவர்கள் திறந்து வைத்த ஸ்மார்ட் வகுப்பறை

மாணவர்கள் திறந்து வைத்த ஸ்மார்ட் வகுப்பறை

மாணவர்கள் திறந்து வைத்த ஸ்மார்ட் வகுப்பறை 
நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் இரண்டாவது ஸ்மார்ட் வகுப்பறை இன்று திறக்கப்பட்டது.  கோவிந்தப்பேரி மனோ கல்லூரி உதவி பேராசிரியர்  முனைவர்.ஆ .விக்டர்பாபு  தலைமைவகித்தார். திரு. பாலமுரளி அவர்கள் முன்னிலை வகித்தார்.  ஸ்மார்ட் வகுப்பறையினை இந்து நடுநிலைப்பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவர்கள் திறந்து வைத்தார்கள் . 

கோவிந்தப்பேரி மனோ கல்லூரி உதவி பேராசிரியர்  முனைவர்.ஆ .விக்டர்பாபு அவர்கள் மாணவர்களிடம் கலந்துரையாடினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.





செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

அனைத்து வகுப்பறைகளுமே ஸ்மார்ட் வகுப்பறை

எங்களது  கனவான அனைத்து வகுப்பறைகளுமே  ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும்  திட்டத்தில் இரண்டாவது வகுப்பறையினை  ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றும் பணி  இன்று நிறைவடைந்தது .  ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க பண   உதவி செய்த எம் பள்ளியின் புரவலர் திரு . கணபதி சுப்பிரமணியன்  அவர்களுக்கும் , ப்ரொஜெக்டர் வழங்கிய
எம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்களின் கணவர் திரு. பாலமுரளி அவர்களுக்கும்  மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.. இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்த வகுப்பறை ஸ்மார்ட் வகுப்பறை என்ற நம்பிக்கையுடன்........ எங்களால் முடியும் ....

சனி, 25 ஆகஸ்ட், 2018

மாநில அளவிலான யோகா போட்டி- அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டு

தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் ட்ரஸ்ட் நடத்திய மாநில அளவிலான யோகாப்போட்டியில் கலந்து கொண்டு 28(முதல் பரிசு 12, இரண்டாம் பரிசு 10, மூன்றாம் பரிசு 6)பரிசுகள் நம்  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றனர்... தமிழ் நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு.கடம்பூர் ராஜு அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்... இந்த வாய்ப்பினை அளித்த தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் ட்ரஸ்ட் துணைத்தலைவர்  திருமதி. கிருஷ்ணவேணி, மற்றும் எம் பள்ளி யோகா பயிற்சியாளர் திரு. ராஜேஷ், ஓவிய ஆசிரியர் திரு. துரை  ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.







புதன், 15 ஆகஸ்ட், 2018

72-வது சுதந்திர தின விழா


நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில்  72-வது  சுதந்திர தின விழா  வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் வரவேற்புரையாற்றினார். பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் தலைமைதாங்கினார். நம் பள்ளியின் புரவலர் திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்கள் . பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப்பொருள் வழங்கி, இரண்டாவது ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 10000/- வழங்கினார்கள். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி, திருமதி. ஜேஸ் மாலா , திருமதி. கோமதி , செல்வி. துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.