பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சேமிப்புக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் தலைமை வகித்தார்கள். முதல் கட்டமாக 17 மாணவர்களுக்கு இன்று சேமிப்பு கணக்கு துவங்கி சேமிப்புக்கணக்குப் புத்தகத்தினை பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் திரு. ஆபிரகாம் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தினைச் சேர்ந்த திரு. அய்யப்பன்(9994760712) அவர்கள் செய்திருந்தார்கள்.
வியாழன், 22 பிப்ரவரி, 2024
வியாழன், 15 பிப்ரவரி, 2024
புத்தாண்டுப்பரிசாக எம் பள்ளி நூலகத்திற்கு 80 தமிழ் நூல்கள்மற்றும் 80 ஆங்கில நூல்கள்
2024 புத்தாண்டுப்பரிசாக எம் பள்ளி நூலகத்திற்கு 80 தமிழ் நூல்கள் மற்றும் 80 ஆங்கில நூல்கள் வழங்கிய மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
30 வகுப்புகளில் மாணவர்களை எளிதாக ஆங்கிலம் பேச வைத்த sampoorna shikshaa
30 வகுப்புகளில் 6,7,8 ம் மாணவர்களை எளிதாக ஆங்கிலம் பேச வைத்த sampoorna shikshaa விற்கு மனமார்ந்த நன்றிகள்....
ஒவ்வொரு மாதமும் இனி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மற்றும் 4,5 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க சம்மதம் தெரிவித்த sampoorna shikshaa விற்கு மனமார்ந்த நன்றிகள்....
இந்த அரிய வாய்ப்பினை எம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய கின்னஸ் சாதனையாளர் Venkatraman K Dubaii Ganapathy Subramanian அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
முழு ஒத்துழைப்பு நல்கிய எம் பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றிகள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)