திங்கள், 29 நவம்பர், 2021
திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (30.11.2021) ஒரு நாள் விடுமுறை
வெள்ளி, 12 நவம்பர், 2021
திங்கள், 8 நவம்பர், 2021
வில்வித்தை பயிற்சி அளிக்கும் முதல் பள்ளி
திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கம் (Tirunelveli Youth Field Archery Association) சார்பில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வில்வித்தை பயிற்சி தமிழக அரசு பள்ளிகளில் விளையாட்டுப்பயிற்சி அளிக்க தளர்வு வழங்கிய பின்னர் தொடங்க உள்ளது. திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association) செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க இருக்கிறார்கள்...
நம் மாவட்டத்தில் முதன்முறையாக வில்வித்தை பயிற்சி அளிக்கும் முதல் பள்ளியாக நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியை தேர்ந்தெடுக்க
திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association) செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்களிடம் கேட்டுக்கொண்டதை உடனடியாக ஏற்றுக்கொண்டு பயிற்சி அளிக்க சம்மதித்த திரு. ப. பாரதிராஜா அவர்களுக்கு நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்
வில்வித்தை பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள 6369030091
We help to Focus your Target
Tamilnadu Youth Field Archery Association ® . Recognized and Affiliated Member of Field Archery Association of India (FAAI) . (FAAI) Member of International Field Archery Association . Member of The Association for International Sports for All (TAFISA) Recognized International Olympic Committee . (FAAI) Recognized by: School Games Federation of India . +91 6369030091
புதன், 3 நவம்பர், 2021
செவ்வாய், 2 நவம்பர், 2021
மாணவ மாணவியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள் . அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன் துணைத்தலைவர் திரு.P.S.K. மாரியப்ப பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் திரு.சோழமுடி ஆகியோர் மாணவர்களின் வரவேற்பு விழாவில் கலந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன் அவர்கள் மாணாக்கர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார்கள் .
வியாழன், 28 அக்டோபர், 2021
விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல்
2021-22ம் கல்வியாண்டின் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தங்கங்களை நம் பள்ளி மாணவர்களுக்கு இன்று பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed., M.Phil., அவர்கள் இன்று வழங்கினார்கள்
விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல்
புதன், 27 அக்டோபர், 2021
தனித்துவமிக்க தலைமையாசிரியர்விருது
திங்கள், 25 அக்டோபர், 2021
மாநில நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு #GRT G.R.THANGAMALIGAI நிறுவனத்தார் பரிசு வழங்கி பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றிகள்....
சனி, 16 அக்டோபர், 2021
வியாழன், 14 அக்டோபர், 2021
சனி, 2 அக்டோபர், 2021
நெல்லை ஒளிப்பதிவாளர் நண்பர்கள்குழு சங்கம நிகழ்வு
வெள்ளி, 1 அக்டோபர், 2021
முனைவர் பட்டம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலருக்கு பாராட்டு
பாப்பாக்குடி சரக தலைமையாசிரியர்கள் கூட்டம் இன்று பாப்பாக்குடி வட்டார வள மையத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்கள் தலைமைதாங்கினார்கள். பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி சு. கல்யாணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . முனைவர் பட்டம் பெற்றமைக்கு சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்ளை பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி சு. கல்யாணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள். வட்டார வள மையம் சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள், பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், சுகாதார நடவடிக்கைகள், ஆசிரியர்களின் கடமைகள் ஆகியன குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களும் எடுத்துரைத்தார்கள்
வெள்ளி, 24 செப்டம்பர், 2021
தனித்துவமிக்க தலைமையாசிரியர்
தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பளித்த S 2 S நிறுவனர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கும் நிகழ்வினை தொகுத்து வழங்கிய திரு. அன்பழகன் அவர்களுக்கும் வலைத்தமிழ் தளத்திற்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்
செவ்வாய், 21 செப்டம்பர், 2021
ஞாயிறு, 19 செப்டம்பர், 2021
மொபைல் பாரடைஸ் வாழ்த்து
வெள்ளி, 17 செப்டம்பர், 2021
தந்தை பெரியாரின் பிறந்த தின சமூக நீதி நாள் உறுதிமொழி
தந்தை பெரியாரின் பிறந்த தினமான இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களால் எடுக்கப்பட்டது