பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

NEWS 7 தமிழ் திரு. செந்தில்வேலுடன் எம் மாணவர்கள் கலந்துரையாடல்

NEWS 7 தமிழ் தலைமை செய்தியாளர்  திரு. செந்தில்வேலுடன்  எம் மாணவர்கள் கலந்துரையாடல்  நிகழ்ச்சி இன்று அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது. செந்தில் அவர்கள் மாணவர்களிடம் ஊடகம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். செய்தியினை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கினார். மாணவர்களின் கேள்விகளான ஜல்லிக்கட்டு , நெடுவாசல், ஊடக அனுபவம், செய்தி கள  அனுபவம்  போன்ற வினாக்களுக்கு எளிமையாக மாணவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தார் . நிகழ்ச்சியில் தனது நண்பர்கள்அரிகேசவநல்லூர்  திரு. சக்திவேல், வெங்கடேஸ்வரன், வீரவநல்லூர் ஐயப்பன்  மற்றும்  பாலமுரளி ஆகியோருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். NEWS 7 தமிழ் செய்தி தலைமை செய்தியாளரும்  எனது நண்பருமான திரு.செந்தில்வேலுக்கும் எனது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.ராம் சந்தர்
தலைமையாசிரியர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்