கலைக்கண்காட்சி 2025
திருநெல்வேலியில் உள்ள பாரம்பரியமான மற்றும் நெல்லை சீமையின் ஒரு அடையாளமான சாராள் தக்கர் கல்லூரியில் நடைபெற்ற கலைக் கண்காட்சியில்அரிகேசநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்த் துறை, ஆங்கிலத்துறை, பொருளாதாரத்துறை, வணிகவியல் துறை மற்றும் வரலாற்றுத் துறை இணைந்து நடத்திய கலைக் கண்காட்சி மாணவர்களை மிகவும் கவர்ந்தது. ஒரு கல்லூரி எவ்வாறு இருக்கும் என்பதை இன்று எம் கிராமப்புற மாணவர்கள் இன்று தான் பார்த்திருக்கிறார்கள். இந்த அனுபவம் எம் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஒரு மிகச்சிறந்த அனுபவத்தையும் அளித்திருக்கிறது . இந்த கலைக் கண்காட்சி யில் கலந்து கொள்ள அனுமதி அளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும் முதல்வர் அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். இந்த கலைக்கண்காட்சியை குறித்து தகவல் தெரிவித்து அழைப்பிதழ் அனுப்பி உடனிருந்து மாணவர்களுக்கு வழிகாட்டிய தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் திருமதி. இரா.செல்வஸ்ரீ அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக