பள்ளிப்பரிமாற்றுத்திட்டம் 2021- 2022
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் 2021-22ம் கல்வியாண்டில் பள்ளி பரிமாற்றுத்திட்டம் இன்று நடைபெற்றது. நம் இந்து நடுநிலைப்பள்ளியும் நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் இத்திட்டத்தில் கலந்து கொண்டோம் . நம் பள்ளியிலிருந்து பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின் படி செயல்பட்டார். நம் பள்ளிக்கு நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.N . கற்பகவேல் அவர்கள் வருகை தந்து செயல்படுத்தினார். நம் பள்ளியில் நடை பெற்ற நிகழ்வினை ஆசிரியர் திருமதி. செ .ஜேஸ் மாலா ஒருங்கிணைத்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை இரு பள்ளிகளின் தலைமையாசிர்களும் செய்திருந்தனர்.