பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 11 ஏப்ரல், 2019

புதிய கட்டிடடப்பணி- நன்றி

புதிய கட்டிடடப்பணி மிக விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கிராமத்துப் பள்ளி அனைத்து நவீன வசதிகளுடன் நடைபெற்றுக்கொண்டிருப்பதன் பின்புலத்தில்  உள்ள நல் உள்ளம் படைத்த பெரியோர்களின் உதவிதான் காரணம் . புதிய கட்டிடத்திற்கு ஆகும் செலவு ரூபாய் 10 லட்சம் . முதலில் நான் தருகிறேன் என்று ரூபாய் 50000/- அளித்த எங்கள் அன்பு சகோதரர் திரு.M.H.M. இப்ராஹிம் (அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளை )அவர்கள்,,ரூபாய்  3,50,000/- அளித்த எங்கள் அரிகேசவநல்லூர் மண்ணின் மைந்தர் திரு. ராமசுப்பிரமணியன்,திருமதி. நந்தினி ராமசுப்பிரமணியன் அவர்கள் , ரூபாய் 1,00,000/- அளித்த எம் பள்ளி செயலர் திரு. டி .வி .சுப்பிரமணியன் அவர்கள் ,ரூபாய் 20,000/- அளித்த எங்கள் பள்ளி ஆசிரியர் திரு.ரெங்கன் அவர்கள், ரூபாய் 35000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி . அமுதவல்லி அவர்கள் ,ரூபாய் 10000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி . அமுதவல்லி அவர்களின்  கணவர் திரு. குப்புசாமி அவர்கள் , ரூபாய் 25000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி அவர்கள்,ரூபாய் 20000/- அளித்த  எம் பள்ளி ஆசிரியை திருமதி .ஜேஸ் மாலா அவர்கள் ,ரூபாய் 20000/- அளித்த செல்வி. தீபா அவர்கள், ரூபாய் 5000/- அளித்த திரு. ராஜாமணி அவர்கள் , எம்  பள்ளி  தலைமையாசிரியர் திரு . ராம் சந்தர்  ரூபாய் 30000,ரூபாய் 10000/- அளித்த திரு. பாலன் அவர்கள் ....எங்களது கனவினை நனவாக்கிய இவர்களுக்கும் , இன்னும் உதவி செய்பவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது."