தனது பள்ளிப்படிப்பினை அரசுப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று இன்று
மேலைநாட்டில் மூன்று முதுகலை பட்டத்தினை நிறைவு செய்து பல மொழிகளைப்
பயின்று உலகில் 35 நாடுகளில் பணிபுரிந்து தற்போது நிதியியல் மேலாளராகப்
பணிபுரிந்து வரும் அருமை தம்பி திரு. விஜய் ராஜேந்திரன் அவர்கள் நம்
பள்ளிக்கு வருகைபுரிந்து தான் உலக நாடுகளில் பெற்ற அனுபவம், மொழியின்
அவசியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி , கல்வியின் முக்கியத்துவம் குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடினார். எமது அழைப்பை மறுக்காமல் ஏற்று பள்ளிக்கு
வருகை தந்து மாணவர்களுடன் உரையாடிய திரு. விஜய் ராஜேந்திரன் அவர்களுக்கு
நம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.