பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 25 ஜூலை, 2018

ROBOTICS-அறிமுக வகுப்பு

இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில்  மதுரை CANOPUS AUTOMATION & ROBOTICS SOLUTIONS நிறுவனத்தின் சார்பில் பொறியாளர் திரு. சரவணபாண்டியன் அவர்கள் ROBOTICS குறித்த அறிமுக வகுப்பு நம் மாணவர்களுக்கு நடத்தினார்கள். ROBO-வின் வளர்ச்சி, பயன்பாடு, உருவாக்குதல் குறித்து விரிவாக மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில்  விளக்கினார்கள். சில வகை ரோபோக்களை நேரடியாக இயக்கிக் காட்டினார்கள் .மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தார்கள் . மாணவர்களி ன்   ROBO  குறித்த சந்தேகங்களை  மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில்  விளக்கினார்கள்.மதுரை CANOPUS AUTOMATION & ROBOTICS SOLUTIONS நிறுவனத்தாருக்கு நம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.