பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 31 ஜூலை, 2018

தன்னம்பிக்கை பரிசளிப்பு விழா











 பரிசளிப்பு விழா
வீரவநல்லூர் அல்பா முஹம்மது ஹுசைன் நினைவு கல்வி  அறக்கட்டளையின் சார்பில் தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் எடுத்த மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா நம்  நடைபெற்றது. விழாவிற்கு வருகைதந்தவர்களை தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் வரவேற்றார். அல்பா முஹம்மது ஹுசைன் நினைவு கல்வி  அறக்கட்டளையின்தலைவர் திரு. M.H.M. இப்ராஹிம் அவர்கள் தேர்வில்90 சதவிகிதத்திற்கு மேல் எடுத்த மாணாக்கர்கள் , விடுப்பு எடுக்காமல் வருகை  மாணவர்கள் , வீட்டுப்பாடம் சரியாக எழுதிய மாணவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கினார்கள் . மாணவர்களிடம் பொதுவான கேள்விகள் கேட்டு சரியான பதில் கூறிய மாணவர்களுக்குப்  வழங்கினார்கள். விழாவில் திருமதி. சல்மா இப்ராஹிம், திரு. முஹம்மது அலி ஜின்னா , திரு.ராமகிருஷ்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி. முத்து செல்வி , திருமதி. அமுதவல்லி , திருமதி. ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, திருமதி. கோமதி, செல்வி. துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.