பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 26 ஜனவரி, 2017

குடியரசு தின விழா -2017

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில்  குடியரசு தின விழா  மிக கோலாகலமாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு.ம. ராம் சந்தர்  வரவேற்றார்.விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக  வீரவநல்லூர் அல்பா முஹம்மது ஹுசைன் அறக்கட்டளையின் தலைவரும் நம்பள்ளியின் புரவலருமான திரு. இப்ராஹிம் அவர்களும்,அன்னாரது குடும்பத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திரு. இப்ராஹிம் அவர்கள் தேசிய கொடி  ஏற்றி  வைத்து  சிறப்புரை ஆற்றினார்கள் .அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்கள் .
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள்,பரிசுகள் அளித்தார்கள். கலை நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்டு பேசிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்கள்.மேலும் நம்பள்ளி புதிய விளையாட்டுத்திடல் மற்றும் நிரந்தர விழா மேடை அமைக்க  நிதி உதவி வழங்கினார்கள். அன்னாருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியை திருமதி. அமுதவல்லி நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.