பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

92 வது ஆண்டு விழா

நமது அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 92 வது ஆண்டு விழா மிக சிறப்பாகக்கொண்டா டப்பட்டது . விழாவிற்கு பள்ளி செயலர் திரு. டி .வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் மூத்த ஓய்வு பெற்ற ஆசிரியரும்  நிர்வாகக்குழு உறுப்பினருமான திரு. இரா. மணி முன்னிலை வகித்தார்.  கல்லிடைக்குறிச்சி திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்களின் த

ந்தையாரும்  ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியுமான திரு . ராமகிருஷ்ணன் ,அம்பாசமுத்திரம் சரக தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்கள் திரு. முருகேசன் பிள்ளை , திரு. சவரீசன் ,ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற துணை தலைவி திருமதி. கருமேனி  அம்மாள் அவர்கள் மற்றும் புதுப்பட்டி TDTA  நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. அருள்மணி அகஸ்டின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் திரு. ராம்சந்தர் , ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி,திருமதி முத்துசெல்வி,திருமதி ஜெஸ்மாலா ,திருமதி. மணிமேகலை ,செல்வி.இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.