நமது அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 92 வது ஆண்டு விழா மிக சிறப்பாகக்கொண்டா டப்பட்டது . விழாவிற்கு பள்ளி செயலர் திரு. டி .வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ப. சந்திரசேகர் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் மூத்த ஓய்வு பெற்ற ஆசிரியரும் நிர்வாகக்குழு உறுப்பினருமான திரு. இரா. மணி முன்னிலை வகித்தார். கல்லிடைக்குறிச்சி திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்களின் த
ந்தையாரும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியுமான திரு . ராமகிருஷ்ணன் ,அம்பாசமுத்திரம் சரக தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்கள் திரு. முருகேசன் பிள்ளை , திரு. சவரீசன் ,ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற துணை தலைவி திருமதி. கருமேனி அம்மாள் அவர்கள் மற்றும் புதுப்பட்டி TDTA நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. அருள்மணி அகஸ்டின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் திரு. ராம்சந்தர் , ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி,திருமதி முத்துசெல்வி,திருமதி ஜெஸ்மாலா ,திருமதி. மணிமேகலை ,செல்வி.இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
ந்தையாரும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியுமான திரு . ராமகிருஷ்ணன் ,அம்பாசமுத்திரம் சரக தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்கள் திரு. முருகேசன் பிள்ளை , திரு. சவரீசன் ,ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற துணை தலைவி திருமதி. கருமேனி அம்மாள் அவர்கள் மற்றும் புதுப்பட்டி TDTA நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. அருள்மணி அகஸ்டின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் திரு. ராம்சந்தர் , ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி,திருமதி முத்துசெல்வி,திருமதி ஜெஸ்மாலா ,திருமதி. மணிமேகலை ,செல்வி.இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.