புதன், 20 பிப்ரவரி, 2019
திங்கள், 11 பிப்ரவரி, 2019
புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா
நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலர் திரு.டிவி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமைதாங்கினார்கள். பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phill.,M.Ed.,M.Phill அவர்கள், வீரவநல்லூர் அல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா மற்றும் முன்னாள் வணிக வரித்துறை இணை ஆணையர் திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019
கூடுதல் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளாலும் பெரியோர்கள் மற்றும் நண்பர்கள்,ஆசிரியர்களின் பொருளுதவி மற்றும் ஆதரவினாலும் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் கூடுதல் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை) நாளை (11.02.2019) காலை 9.00 முதல் 10.30 க்குள் நடைபெற உள்ளது. அனைத்து நல்லுள்ளங்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
செயலர், தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், இந்து நடுநிலைப்பள்ளி, அரிகேசவநல்லூர்
இவண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)