NEWS 7 தமிழ் தலைமை செய்தியாளர் திரு. செந்தில்வேலுடன் எம் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது. செந்தில் அவர்கள் மாணவர்களிடம் ஊடகம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். செய்தியினை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கினார். மாணவர்களின் கேள்விகளான ஜல்லிக்கட்டு , நெடுவாசல், ஊடக அனுபவம், செய்தி கள அனுபவம் போன்ற வினாக்களுக்கு எளிமையாக மாணவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தார் . நிகழ்ச்சியில் தனது நண்பர்கள்அரிகேசவநல்லூர் திரு. சக்திவேல், வெங்கடேஸ்வரன், வீரவநல்லூர் ஐயப்பன் மற்றும் பாலமுரளி ஆகியோருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். NEWS 7 தமிழ் செய்தி தலைமை செய்தியாளரும் எனது நண்பருமான திரு.செந்தில்வேலுக்கும் எனது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.ராம் சந்தர்
தலைமையாசிரியர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
ம.ராம் சந்தர்
தலைமையாசிரியர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக