பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 29 நவம்பர், 2016

2016- எமக்குக் கிடைத்த வரங்கள்

2016-  எமக்குக்  கிடைத்த  வரங்கள் - ஐயா .திரு. கணபதி  சுப்பிரமணியன்  அவர்கள் 
 நம்   பள்ளிக்கு  8 செட்  டெஸ்க்  பெஞ்சுகள் ,  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கியுள்ளார்கள்   மற்றும்   இரு





ஆசிரியர்களுக்கு  மாத  ஊதியம்  அளித்து வருகிறார்கள் . அன்னாரின் தந்தையார் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள்   முதலிடம் பெற்ற அனைத்து வகுப்பு மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளார்கள்.  ஐயா .திரு. கணபதி  சுப்பிரமணியன்  அவர்கள்  தனது குடும்பத்தினருடன் நம் பள்ளிக்கு வருகை தந்து நம் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்கள் .இன்னும் என்ன உதவி வேண்டும் என்றாலும்  செய்யத் தயாராக இருக்கும்  ஐயா .திரு. கணபதி  சுப்பிரமணியன்  அவர்கள் இறைவன் எமக்கு அளித்த வரமாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக