தேசிய வாக்காளர் தினம் இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் திரு. ம. ராம் சந்தர் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் திருமதி.செண்பகம் முன்னிலை வகித்தார்.ஆசிரியை திருமதி. ஜேஸ் மாலா வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தனர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி. மணிமேகலை, திருமதி. இன்பரசி , சத்துணவு அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக