பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 8 ஜூலை, 2018

பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகஸ்ட் முதல் அமல்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகஸ்ட்  முதல் அமல்: கல்வி அமைச்சர்பேச்சு அரசு ஊழியர்களின் பிள்ளைகளை,
அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று,, கட்டாயப்படுத்த முடியாது: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
ஆகஸ்ட் மாதம் முதல், அரசுப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு, அமலுக்கு வருகிறது என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், 80.24 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்கள், எந்தவொரு போட்டித்தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது
தனியார் பள்ளிகள், பள்ளி வேலை நாட்களில் 'நீட்' தேர்வு பயிற்சி மேற்கொள்ளகூடாது. விடுமுறை நாட்களில் மட்டுமே அளிக்க வேண்டும்
இதை மீறினால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது
ஈரோடு முதல் மேட்டுப்பாளையம் வரையிலும், அதேபோல் பவானி முதல், சத்தியமங்கலம் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். வரும் ஆக., முதல் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும், பயோ மெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில், வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது
கூடிய விரைவில், 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பணியில் அமர்த்தப்படும்
அரசு ஊழியர்களின் பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று, கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக