பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது-2021

தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு. விஷ்ணு இ.ஆ.ப. அவர்களின் பொற்கரங்களால் பெற்றுக்கொண்டேன். இவ்விருதிற்கு பரிந்துரை செய்த பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கும், சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களுக்கும்,திரு நெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருது பெற ஊக்கசக்தியாக திகழ்ந்து வரும் எம் பள்ளி செயலர் அவர்களுக்கும், எம் பள்ளியின் புரவலர்களுக்கும், என் பெற்றோருக்கும், என் குடும்பத்தினருக்கும், என்னுடன் பணியாற்றும் எனது ஆசிரியர்களுக்கும், என் நண்பர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்,ஊர்பொதுமக்களுக்கும் எனதன்பு மாணவச்செல்வங்களுக்கும்  மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக