பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

தலைமையாசிரியர் அவர்களுக்கு பாராட்டு விழா

 2021ம் ஆண்டிற்கான  தமிழக அரசு கல்வித்துறையின் உயரிய விருதான  டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது பெற்றமைக்காக  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் திரு ம . ராம் சந்தர் அவர்களுக்கு பள்ளியில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது . வீழாவிற்கு  பள்ளி செயலர் திரு. டி.வி .சுப்பிரமணியன் அவர்கள் தலைமைவகித்தார்கள் . ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு. S .S . ரெங்கன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி வரவேற்புரை யாற்றினார் . பள்ளி செயலர் செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் அவர்கள் தலைமையாசிரியர் திரு ம . ராம் சந்தர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள் . இந்த நிகழ்வில் தலைமையாசிரியர்  திரு ம . ராம் சந்தர் தான் பெற்ற விருது தொகையான ரூபாய் 10000/-த்தினை பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு அளித்து  ஏற் பு ரையாற்றினார்கள் .இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் குப்புசாமி, அமுதவல்லி, டேக் வொண்டோ  பயிற்சியாளர் திரு. பாரதிராஜா, கண்டப்பட்டி மனோகரன், பாலமுரளி ,அம்பை சபரி ஜெராக்ஸ் சட்டநாதன் , வீரவநல்லூர் சந்தோஷ் பர் னி ச்சர்  ஐயப்பன் ,பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.சுப்புலட்சுமி ராம்சந்தர்  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள் .ஆசிரியை திருமதி. ஜேஸ் மாலா  நன்றி கூறினார்கள்  விழாவில் ஆசிரியர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக