அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் வாய்ஸ் ஸ்னாப் சர்வீஸஸ்(பி) லிட், நிறுவனத்தின் சார்பில் வாய்ஸ் மெஸேஜ் வாயிலாக மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ளும் செயலியினை நம் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்களும் , எம் பள்ளி முன்னாள் மாணவியும் கணிப்பொறி ஆசிரியையுமான செல்வி.முத்துலெட்சுமி ஆகியோர் தொடக்கி வைத்தார்கள் .
முதல் நாளிலேயே பெற்றோர்களின் ஆதரவு எங்களை மகிழ வைத்தது .
செயலியின் சிறப்புகள்
1. வாய்ஸ் கால் பெற்றோர்களின் அலைபேசியினை தொடர்புகொள்ளலாம் (இதற்கு இணைய வசதி தேவை இல்லை)
2.செயலியில் பள்ளிக்கு வராதமானவர்களை தேர்வு செய்த அடுத்த வினாடி " உங்கள் குழந்தை இன்று பள்ளிக்கு வரவில்லை" என்ற வாய்ஸ் கால் பெற்றோர்களுக்கு சென்று விடும்.
3. வீட்டுப்பாடத்தினை செய்தியாக,குரல் அழைப்பாக ,புகைப்படமாக அனுப்பலாம்.
4.மாணவர்கள் விடுப்பு எடுக்க விண்ணப்பிக்கலாம்
5.ஆசிரியர்களுடன் கலந்துரையாடலாம்
6. ஆன் லைன் வகுப்புகளில் இணையலாம்
7ஆன்லைன் தேர்வு எழுதலாம்
8.பாடங்கள் சம்பந்தமான வீடியோக்கள் பார்க்கலாம்
9.அனைத்து மாணவர்கள் பெற்றோர்கள்ஆசிரியர்களுக்கு சொல்லக்கூடிய செய்திகளை அடுத்த நிமிடத்தில் ஒரே அழைப்பின் மூலம் செய்திகளை குரல் அழைப்பின் மூலம் சொல்லலாம்
இன்னும் சிறந்த பலன்கள் இதில் உள்ளது மாணவர்களுக்கான செயலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக