பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 15 மார்ச், 2022

நம் பள்ளி செயலருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நெல்லை மாவட்டம் அரிகேசவ நல்லூர் கிராமத்திற்கு மட்டுமே தெரிந்திருந்த இந்து நடு நிலைப்பள்ளியின் பெயரானது இன்று மாவட்டம்  தாண்டியும்  புகழ்பெற்றிருப்பதற்கு முக்கிய காரணகர்த்தா எம் பள்ளியின் செயலர் திரு. டி.வி. சுப்பிரமணியன் அவர்கள்... செயலரைப்போல் அல்லாமல் ஒரு தந்தையைப்போல் எங்களுடன்  பழகுபவர்... எங்கள் பள்ளியின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் பங்கு கொண்டு வளர்ச்சியைக்கண்டு ஒரு தாயைப்போல அகம் மகிழ்பவர் எங்களின் செயலர்... தந்தையின் மீது எந்த அளவு அன்பும் கவனிப்பும் அரவணைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்று எங்களுக்கு உணர்த்தியவர் எங்கள் பள்ளி செயலரின் புதல்வரும் எங்களின் சகோதரருமான திரு. சு,. வெங்கட சுப்பிரமணியன் அவர்கள்....கடினமான உழைப்பாளி... தந்தைக்கும் மகனுக்கும் இன்று பிறந்த நாள்....இருவரும் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள்,
இந்து நடு நிலைப்பள்ளி, அரிகேசவ நல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக