பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 14 மார்ச், 2022

ஊக்கப்பரிசு அளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்

ஊக்கமே திறமைகள் வெளிப்பட முக்கிய காரணம்..
அந்த வகையில் எம் பள்ளி மாணவர்களின் திறமைகள் மேலும் வெளிப்பட ஊக்கத்தொகை வழங்கிய  
மதிப்பிற்குரிய கிருஷ்ணாபுரம்திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு.பழனிக்குமார் மற்றும் சர்வீஸ் டூ சொசைட்டி நிறுவனர் திரு.ரவிசொக்கலிங்கம் சார்அவர்களுக்கு எம் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்..🙏🏻🙏🏻 ..மணியார்டரில் கையெழுத்திடும் பொழுது என் மாணவர்களின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியினைக் காண முடிந்தது ..எம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ம.ராம்சந்தர் அவர்கள் அவ்வூக்கப்பரிசினை வழங்கினார் ..மகிழ்ச்சியான நாள் தொடரட்டும்..எம் அனைத்து மாணவர்களின் திறமைகளும் மென்மேலும் வெளிப்படும்..

சு.முத்துசெல்வி
பட்டதாரி ஆசிரியர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக