பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 1 செப்டம்பர், 2016

டெங்கு விழிப்புணர்வு

டெங்கு விழிப்புணர்வு
இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலை மற்றும்பாலங்கள் உதவி செயற்பொறியாளரும் மண்டல அலுவலருமான  திரு. லட்சுமணன் அவர்கள் தலைமை தா ங்கினார்கள்.  பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. ராணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  மாணவர்களிடையே டெங்கு பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்கள். தலைமை ஆசிரியர்  திரு.ராம்சந்தர் , பாப்பாக்குடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. அக்பர் அலி , அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவி திருமதி. ஜெயலட்சுமி, ஒன்றிய பணி  மேற்பார்வையாளர் திரு. ஆறுமுக  ராஜா  சுகாதார மேற்பார்வையாளர்  திரு. சங்கரலிங்கம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.. பின் விழிப்புராணவு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு  வாசகங்களை கோஷமிட்டு சென்றனர். அனைவருக்கும் நிலா வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி,திருமதி முத்து செல்வி, திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி. அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.










 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி அமுதவல்லி, திருமதி. மு த்துச்செல்வி , திருமதி மணிமேகலை,இ ன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக