இன்று(04.09.2015) மாலை அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா கொண்டாடப்பட்டது. சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் , அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்றம் மற்றும் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப் பள்ளி மாணவர்கள் இணைந்து மரக் கன்றுகள் நட்டார்கள். விழாவில் அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெய லட்சுமி , ஸ்காட் கல்லூரி திட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆசிரியர் ராம்சந்தர், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக